மீட்சி
பிரத்யேக அழைப்பொலியில்
அவிழும் காட்சிகள்
நடுநிசியில் விழித்துக்கொண்டு
இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது
பெறுவது ஒன்றுமில்லாதபோதும்
உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்
வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்
தீராத ஏக்கத்தின் நினைவு
பெரும் கனவுகளாக சபிக்கின்றனெ.