ஆகஸ்ட் 18, 2007 at 9:15 பிற்பகல் (கவிதை)

கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான்

மரம் எதுவாகிறது

மரத்திலுள்ள கனிகள் அதன்

காலத்தை காட்டிக்கொடுக்கிறது

கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது

மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்

பிறகு

எறும்பின் பாவனையில்

மரமெங்கும் பரவுகிறான்

மரம் வேரோடு சாய்வதுபோல்

அசைகிறது

பெறும் மிரட்ச்சியுடன் அதன்

கிளைகளை பற்றிக்கொண்டு

அவனும்

மரத்தோடு அசைகிறான்

உயிர்வதை துவங்குகிறது

மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்

பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்

தலைமுறைபகிர்வுகளாகிறது

மறுமொழியொன்றை வழங்குக

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட