காதலிசம்
நம்
சந்திப்புகளில் சருக்கி விழுகிறது
இதயம்
குடையிருந்தும்
நீ இருந்தும் மழையில்லை
இலக்கியமே
உன் மௌனப்பேச்சின் பரிசு
இன்று வரை
உண்மையை பேசமுடியவில்லை
உன்னோடு
வருடிக்கிடக்கிறது
என் கழுத்துக்கு கீழே உன் வதனம்
“அம்மா” வை முந்திக்கொண்டு
தும்மலில் உன் பெயர்
கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான்
மரம் எதுவாகிறது
மரத்திலுள்ள கனிகள் அதன்
காலத்தை காட்டிக்கொடுக்கிறது
கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது
மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்
பிறகு
எறும்பின் பாவனையில்
மரமெங்கும் பரவுகிறான்
மரம் வேரோடு சாய்வதுபோல்
அசைகிறது
பெறும் மிரட்ச்சியுடன் அதன்
கிளைகளை பற்றிக்கொண்டு
அவனும்
மரத்தோடு அசைகிறான்
உயிர்வதை துவங்குகிறது
மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்
பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்
தலைமுறைபகிர்வுகளாகிறது
ஜன்னலோரம்
இன்று
வெய்யில் அதிகம் தான்
அதன் பலனோ என்னவோ
மழை
மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்
எங்கும் ஈரப்பதம்
இருப்பினும் இரவு வந்துவிட்டது
நிலவும் தான்
கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்
சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு
நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது
இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள்
மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்டகவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன்.
காதலின் குறியீடு
கண்கள்
கண்கள் மௌனம்
ஏதோ
ஒருவித சலனம்
நிகழ்காலங்கள்
நினைவில் இல்லை
புரிந்தபோதும்
வார்த்தையில் வறட்சி
உறங்கும் பாவனை
கனவு வேண்டல்
விடிந்ததும்
முதல் நினைவு
அதிக நேர அலங்கரிப்பு
இதய துடிப்பு கூட
அதன் பெயரில்
அழுவதற்கான வாய்ப்புகள்
காத்திருந்து பெறும்
மருத்துவமில்லாத வியாதி
கண்ணீர் வரைபடங்கள்
கண்ணங்களில்
காணாத பொழுதெல்லாம்
அது
வலியா ?
சுகமா ?
அவஸ்தையை பற்றிக்கொண்டு
தேம்ப தேம்ப விழிக்கும்
எதிர்படும்
நிஜங்கள் நிழலென…
ஓவியமாய்…
ஓவியம் அந்த ஒன்று மட்டும்
விழிவிழுந்து கடக்கும் வரை
தீவிரப்படும்
லப்டப இசையென…
இறக்கமின்றி கொலைபடும்
பூக்கள் காதலின் குறியீடுகள்
சம்மதம் பெற…
எல்லாம் காதலாய்
அந்த
இதய சேர்க்கை நிகழும் வரை…!