நமக்குள்…
ஒருவித சுழற்சியால் மெதுவாக
மேலெழும்புகிறது ஏதோ ஒரு தவிப்பு
இன்பமும் துன்பமும் சமநிலையில்
சில சமிக்கைகள் நிகழ்ந்த வண்ணமிருக்க
இதழ் உடுத்தாத புன்னகை
உதிர்கிறது மனதின் ஆழத்தில்
மழைப்பதத்தின் சாராலரக ஒரே சுவாசம்
ஏறி இறங்குகிறது இருவருக்குமானதாக
வெளிச்சத்தின் அரங்கத்தில்
வௌ;வேறு நிர்ணயங்களில் தரிசித்தும்
கலைகிறது முழு சாத்தியங்களுடன்
தவத்தின் நிலை