ஜூன் 15, 2010 at 9:35 மு.பகல் (கவிதை)

மௌனத்தடங்கள் உடைத்து
உயிர்பெயர்க்கும் சுமூகமாக
ஆழ்ந்த உறக்கம் கண்காணாமல்
திகட்டாத இன்பம் அருந்தி
திறந்தே கிடக்கும் துயரம்
யுத்தங்களுக்கு மத்தியில்
சமாதானத்தின் நிமித்தம்
கருவரையில்லாமலே பிரசவிக்கும்
அதன் வார்த்தைகள்
நிலவிற்கு ஒப்பிடும்
நிஜத்தின் பொய்யாக்கம்
#

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

ஜூன் 6, 2010 at 9:03 மு.பகல் (கவிதை)

எப்படியாவது ஒரு கவிதையெழுதிவிடவேண்டுமென்று
தனிமை கருதி
மாடிப்படியில் அமர்கிறேன்
அங்கு என் தனிமையைக் கலைக்கும் விதமாய்
என் கை தொலைபேசி துடிக்கிறது
அதில் நீதி வருகிறான்
நான் பதிலாகிறேன்
அவனும் ஒரு கவிதை சொல்கிறான்
என் கருத்தும் அவன் கவிதையை சூழ்கிறது
துண்டிக்கப்பட்ட கை தொலைபேசியும்
புகைக்கப்பட்ட சிகரெட் துண்டும்
இறந்தது போல் கிடக்கிறது
கவிதைக்கான சொல் தேடுகிறேன்
எந்தச் சொல்லும் அமையவில்லை
உனக்கும் எனக்குமான சொல்
வாழவைக்கும் சொல்
வதைக்கும் சொல்
வலிக்கும் சொல்
சாகடிக்கும் சொல்லென
எல்லாச் சொற்களும் என்னிடம் இருக்கிறது
ஆனால்
அந்த சொற்களை பயன்படுத்தத் தெரியவில்லை
சொற்கள் தான் கவிதையின் பலம்

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

வார்ப்பு இணையம்

அக்டோபர் 9, 2007 at 3:35 மு.பகல் (இணையத்தில் இவனும்)

1.       அறிவுநிதி

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

முகவரி வலைப் பூ

அக்டோபர் 8, 2007 at 7:21 மு.பகல் (இணையத்தில் இவனும்)

14.அறிவுநிதி

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

முத்துக்கமலம் இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:18 மு.பகல் (இணையத்தில் இவனும்)

  1. காதல் எது வரை?
  2. ஜன்னலோரம்…?

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

திண்ணை இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:15 மு.பகல் (இணையத்தில் இவனும்)

1. அறிவுநிதி கவிதைகள்

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

கீற்று இணையம்

அக்டோபர் 8, 2007 at 6:50 மு.பகல் (இணையத்தில் இவனும்)

      1. நின் சலனம்
      2. காதலின் குறியீடு
      3. ஜன்னலோரம்
      4. காதலிசம்
      5. தலைமுறைபகிர்வுகள்
      6. மற்றுமொரு
      7. யாரும் அறியாத நாம்!
      8. இப்படிக்கு
      9. நமக்குள்
      10. மௌனம்
      11. பிரிவின் நீட்சி

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

நின் சலனம்

அக்டோபர் 2, 2007 at 1:39 பிற்பகல் (கவிதை)

மலரில் இளைப்பாரும

பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்

உன் நினைவுகளில்

என் இதயம்   இமைமூடி

உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு

இடையில்

திறந்தே கிடக்கிறது

உன் முகப்படம்   

கறையைக் கடக்காத அலைகள்

மீண்டும் மீண்டும்

அதன் முயற்சிபோல

நானும் காதலில்  

 உனக்கு ஒரு புதுப்பெயர்

ஒப்பிடுகிறேன் திருடி   

மலர்மோதி மலர் சிதைந்ததில்லை

உன் பொய்கோபம் போல 

நாம்

அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்

என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்   

நம்

யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்

இதயங்கள் சரணடைந்தன.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

மீட்சி

அக்டோபர் 2, 2007 at 1:15 பிற்பகல் (கவிதை)

பிரத்யேக அழைப்பொலியில்

அவிழும் காட்சிகள்

நடுநிசியில் விழித்துக்கொண்டு

இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது

பெறுவது ஒன்றுமில்லாதபோதும்

உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்

வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்

தீராத ஏக்கத்தின் நினைவு

பெரும் கனவுகளாக சபிக்கின்றனெ.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

காதலிசம்

ஆகஸ்ட் 18, 2007 at 9:21 பிற்பகல் (கவிதை)

நம்
சந்திப்புகளில் சருக்கி விழுகிறது
இதயம்

குடையிருந்தும்
நீ இருந்தும் மழையில்லை

இலக்கியமே
உன் மௌனப்பேச்சின் பரிசு

இன்று வரை
உண்மையை பேசமுடியவில்லை
உன்னோடு

வருடிக்கிடக்கிறது
என் கழுத்துக்கு கீழே உன் வதனம்

அம்மாவை முந்திக்கொண்டு
தும்மலில் உன் பெயர் 

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

Next page »

Follow

Get every new post delivered to your Inbox.