வார்ப்பு இணையம்

அக்டோபர் 9, 2007 at 3:35 நான் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

முகவரி வலைப் பூ

அக்டோபர் 8, 2007 at 7:21 நான் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

முத்துக்கமலம் இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:18 நான் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

திண்ணை இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:15 நான் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

கீற்று இணையம்

அக்டோபர் 8, 2007 at 6:50 நான் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

நின் சலனம்

அக்டோபர் 2, 2007 at 1:39 பிற்பகல் (கவிதை)

மலரில் இளைப்பாரும

பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்

உன் நினைவுகளில்

என் இதயம்   இமைமூடி

உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு

இடையில்

திறந்தே கிடக்கிறது

உன் முகப்படம்   

கறையைக் கடக்காத அலைகள்

மீண்டும் மீண்டும்

அதன் முயற்சிபோல

நானும் காதலில்  

 உனக்கு ஒரு புதுப்பெயர்

ஒப்பிடுகிறேன் திருடி   

மலர்மோதி மலர் சிதைந்ததில்லை

உன் பொய்கோபம் போல 

நாம்

அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்

என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்   

நம்

யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்

இதயங்கள் சரணடைந்தன.

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

மீட்சி

அக்டோபர் 2, 2007 at 1:15 பிற்பகல் (கவிதை)

பிரத்யேக அழைப்பொலியில்

அவிழும் காட்சிகள்

நடுநிசியில் விழித்துக்கொண்டு

இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது

பெறுவது ஒன்றுமில்லாதபோதும்

உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்

வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்

தீராத ஏக்கத்தின் நினைவு

பெரும் கனவுகளாக சபிக்கின்றனெ.

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

காதலிசம்

ஆகஸ்ட் 18, 2007 at 9:21 பிற்பகல் (கவிதை)

நம்
சந்திப்புகளில் சருக்கி விழுகிறது
இதயம்

குடையிருந்தும்
நீ இருந்தும் மழையில்லை

இலக்கியமே
உன் மௌனப்பேச்சின் பரிசு

இன்று வரை
உண்மையை பேசமுடியவில்லை
உன்னோடு

வருடிக்கிடக்கிறது
என் கழுத்துக்கு கீழே உன் வதனம்

அம்மாவை முந்திக்கொண்டு
தும்மலில் உன் பெயர் 

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

ஆகஸ்ட் 18, 2007 at 9:15 பிற்பகல் (கவிதை)

கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான்

மரம் எதுவாகிறது

மரத்திலுள்ள கனிகள் அதன்

காலத்தை காட்டிக்கொடுக்கிறது

கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது

மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்

பிறகு

எறும்பின் பாவனையில்

மரமெங்கும் பரவுகிறான்

மரம் வேரோடு சாய்வதுபோல்

அசைகிறது

பெறும் மிரட்ச்சியுடன் அதன்

கிளைகளை பற்றிக்கொண்டு

அவனும்

மரத்தோடு அசைகிறான்

உயிர்வதை துவங்குகிறது

மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்

பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்

தலைமுறைபகிர்வுகளாகிறது

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

ஜன்னலோரம்

ஆகஸ்ட் 18, 2007 at 9:09 பிற்பகல் (கவிதை)

 இன்று
வெய்யில் அதிகம் தான்  

அதன் பலனோ என்னவோ
மழை  

மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்  

எங்கும் ஈரப்பதம்  

இருப்பினும்  இரவு வந்துவிட்டது
நிலவும் தான் 

கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்  

சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு  

நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது 

இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள் 

மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்டகவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன். 

நிரந்தர பந்தம் மறுமொழிகள் ஏதும் இல்லை

« முந்தைய இடுகைகள்